தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ மாணவிகள் பங்கேற்ற ரத்ததான விழிப்புணர்வு பேரணி! - world blood donation day

திருவள்ளூர்: உலக ரத்ததான தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மருத்துவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ரத்த தானம் விழிப்புணர்வு பேரணி

By

Published : Jun 14, 2019, 6:28 PM IST

ஆண்டுதோறும் உலக ரத்ததான தினம், ஜூன் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரத்த தானம் விழிப்புணர்வு பேரணி

இந்தப் பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விஎம் சாலை வழியாக சென்று திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தின் அருகே முடிவடைந்தது. வழிநெடுகிலும் ரத்ததானம் செய்வோம், உயிரிழப்பை தடுப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி மருத்துவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.இதில் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details