தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 8, 2020, 5:37 PM IST

ETV Bharat / state

உ.பி. கூட்டுப்பாலியல் வழக்கு: நீதி கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவள்ளூர்: உ.பி. கூட்டுப்பாலியல் வழக்கில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கிழக்கு மாவட்ட சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியினர், உ.பி. கூட்டுப்பாலியல் வழக்கில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விச்சூர் சங்கர் தலைமை தாங்கினார். அதில் பாஜக அரசை கண்டித்தும், உ.பி.மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதில் அவர்கள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருவதாகவும், அதனை பாஜக அரசு கண்டுகொள்ளாமலும் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க:சகோதரரின் நண்பரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட காது கேளாத சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details