தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் ரயிலிலிருந்து மகள்களைத் தள்ளிவிட்டு தாயும் குதித்து தற்கொலைக்கு முயற்சி - Chennai Rajiv gandhi hospital

திருவள்ளூர்: ஓடும் ரயிலிலிருந்து தனது இரண்டு மகள்களையும் தள்ளிவிட்டு தாயும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ஓடும் ரயிலிலிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி
ஓடும் ரயிலிலிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

By

Published : Mar 8, 2021, 10:09 PM IST

திருவள்ளூர் அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் கடந்த ஒரு மாதம் முன்பு இறந்துவிட்டதால், அவரது மனைவி முனிலட்சுமி மன அழுத்தத்தால் இருந்துவந்தார்.

அவர் தனது இரண்டு மகள்களை அழைத்துக்கொண்டு பட்டாபிராம் பகுதியிலிருந்து அரக்கோணம் செல்லும் தொடர்வண்டியில் சென்றுள்ளார். அப்போது திடீரென செவ்வாய்ப்பேட்டை புட்லூர் இடையே ஓடும் ரயிலிலிருந்து தனது இரண்டு மகள்களையும் தள்ளிவிட்டு, தானும் கீழே குதித்துள்ளார்.

அப்போது சகப் பயணிகள் அவர்களை மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்துள்ளனர். அதில் முனிலட்சுமிக்கு இடது கை உடைந்து, தலையில் பலத்த அடியும் ஏற்பட்டுள்ளது.

அவருடைய மகள்கள் ஹர்ஷிதா (13), வர்ஷிதா (7) படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details