தூய்மைப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டம், மருத்துவம், அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வு தேசிய கமிஷனர் ஜெகதீஷ் ஹர்மேனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கூட்டத்தில் ஜெகதீஷ், திருவள்ளூரில் உள்ள நான்கு நகராட்சிகள், பத்து பேரூராட்சிகள், 526 ஊராட்சிகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா, மேலும் அவர்களுக்குப் போதுமான அளவு மருத்துவ வசதிகள், மருத்துவக் காப்பீடுகள், பணியில் ஈடுபடுவதற்குத் தேவையான கையுறைகள், காலுறைகள், முகமூடிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா, முறையான ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது தொடர்பாக கேட்டறிந்தார்.