திருவள்ளூரில் அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் வேணுகோபால் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசியதாவது, "அம்மாவின் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அதுமட்டுமில்லாமல் 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இலவச லேப்டாப் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டன ஒரு லேப்டாப் விலை ரூ.14 ஆயிரம் அனைத்தும் இலவசமாக கொடுக்கப்பட்டு விட்டன அதனால் இரட்டை இலை சின்னத்துக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள்" என்றார்
திருவள்ளூர் பிரச்சாரத்தில் இலவசங்களை கூறி ஓட்டு சேகரித்த முதல்வர் - எடப்பாடி பழனிசாமி
திருவள்ளூர்: விவசாயிகளைப் பற்றி நன்கு அறிந்தவன் அதனால்தான் விவசாயத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கினேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் பிரச்சாரத்தில் முதல்வர்
மேலும் அவர் பேசுகையில், "நான் விவசாயிகளைப் பற்றி நன்கு அறிந்தவன் அதனால் தான் விவசாயத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 வீதம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான் வழங்கினேன் ஆனால் திமுகவில் ஓட்டுக்கு பணம் என்று பொய்யாக கூறுகிறார்கள்." என்று தெரிவித்தார்.