ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தனது பிறந்த நாளை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கொண்டாடினார். இதில் பல்வேறு இசைக் கலைஞர்களும் இசை மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் வெளிநாட்டு இசை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது ரஹ்மான் 'தஅ' என்னும் புதிய இசைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது குறித்து அவர் கூறிய போது, ' 'தஅ' திட்டம், இளைய தலைமுறையினர் இன்று அனைத்தையும் இணையதளத்திலும் சமூக வலைதளத்திலும் பார்த்து கற்றுக்கொள்கின்றனர். எனவே உலகத்தில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களில் இருந்து அவர்களை மீட்டு விஞ்ஞானிகள் ஆகவும் இசையமைப்பாளர்கள் ஆகவும் தலைசிறந்த மனிதர்களாகவும் மாற்ற இந்த முயற்சி பெரிதும் உதவும்.