தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயி பழனிசாமி வெற்றிபெற வேண்டும்- பரப்புரையில் பட்டையை கிளப்பிய அன்புமணி

திருவள்ளூர்: சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர், பூவிருந்தவல்லி பாமக வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

By

Published : Mar 22, 2021, 10:30 AM IST

anbumani ramadoss election campaign
anbumani ramadoss election campaign

திருவள்ளூர் சட்டபேரவை அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, பூவிருந்தவல்லி பாமக வேட்பாளர் ராஜமன்னார் ஆகியோரை ஆதரித்து நேற்று (மார்ச் 21) வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது "இந்தத் தேர்தல் விவசாயி எடப்பாடி பழனிச்சாமிக்கும் வியாபாரி மு.க. ஸ்டாலினுக்குமான தேர்தல் என்றும், இதில் விவசாயி வெற்றி பெற அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணாவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பூவிருந்தவல்லி வேட்பாளர் இராஜமன்னாருக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்.

பரப்புரையில் பட்டையை கிளப்பிய அன்புமணி

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த முதலமைச்சர் வருங்காலத்தில் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவது எங்கள் வேலையல்ல - வினோதினி

ABOUT THE AUTHOR

...view details