தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 16, 2019, 12:01 AM IST

ETV Bharat / state

'திருத்தணியில் உள்ள  அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை' - ஆய்வு செய்த முன்னாள் எம்.பி.!

திருவள்ளூர் : திருத்தணி அருகே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலை விரைவில்  திறக்கப்பட உள்ள நிலையில் முன்னாள் எம்.பி., கோ ஹரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

admk-statue-news

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினரால் முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, டாக்டர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர்களின் திருஉருவச்சிலைகள் அமைக்கப்பட்டு அதன் பணிகள் நிறைவடைந்தன.

இந்நிலையில், விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் கூடிய விரைவில் இந்த மூன்று சிலைகளும் திறக்கப்பட உள்ள நிலையில், இதனை அரக்கோணம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ ஹரி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பணிகளை துரிதப்படுத்தவும், சிலையின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

திருத்தணியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்

பின்னர், கூடிய விரைவில் முதலமைச்சர் கையால் இச்சிலைகள் திறக்கப்பட இருப்பதையும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் மருத்துவமனையில் அனுமதி !

ABOUT THE AUTHOR

...view details