தமிழ்நாடு

tamil nadu

கர்ப்பிணி மகள் முகத்தில் அமிலம் வீசிய தந்தை

By

Published : Feb 5, 2020, 9:24 AM IST

திருவள்ளூர்: காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் முகத்தில் அமிலம் வீசியதுடன் காரில் கடத்திச்சென்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

accused-arrest
accused-arrest

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாய்குமார் தனது வீட்டினருகே வசித்து வந்த தீபிகா என்ற பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த தீபிகாவின் தந்தையும் விருப்ப ஓய்வு பெற்ற தலைமைக் காவலருமான பாலகுமார் வீட்டை காலி செய்துவிட்டு திருத்தணியில் குடியேறினார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா சாய்குமாருக்கு கடந்த ஜூன் மாதம் போன் செய்து வரவழைத்து பெங்களூருக்குச் சென்று திருமணம் செய்துகொண்டார்.

தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள தீபிகாவை அவரது தந்தை பாலகுமார் கடந்த 31ஆம் தேதி, அவரது தாயின் உடல்நிலை சரியில்லை எனக்கூறி தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு தீபிகா மறுக்கவே, கையில் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை தீபிகா, அவரது மாமியார் பாக்கியலட்சுமி, பெரிய மருமகள் திவ்யா ஆகியோர் மீது வீசிவிட்டு தீபிகாவை காரில் கடத்திச்சென்றார்.

கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், கொலை செய்துவிடுவேன் என்றும் தந்தை பாலகுமார் மிரட்டியதாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையறிந்த தீபிகாவின் தந்தை பாலகுமார் வேப்பம்பட்டு பிராதான சாலையில் தீபிகாவை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார்.

முகத்தில் அமிலத்தை வீசிய தந்தை

இதுகுறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான காவல் துறையினர் வேப்பம்பட்டு பகுதியில் வாகன சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த பாலகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது

ABOUT THE AUTHOR

...view details