திருவள்ளூர் : முருகனின் ஐந்தாம் படைவீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாகவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்தும் வழிபடுவார்கள்.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஆடிக்கிருத்திகை விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. திருக்கோயில் சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.