திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு ரேசன் அரிசி கடத்திச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியை வாங்கி ஆந்திராவிற்கு ஒரு கும்பல் கடத்திச்செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் ஆந்திராவிற்கு ரேசன் அரிசியை கடத்திச்சென்ற வாகனம் ஒன்று பெருவாயல் கிராமத்தில் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.