திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, சிப்காட் தொழிற்பேட்டை, பெத்திகுப்பம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பல வீடுகளில் கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறி நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் தேர்வழியைச் சேர்ந்த சுரேஷ், குகன், பாக்யராஜ், திருமலை, சூர்யா மற்றும் அயனநல்லூரை சேர்ந்த விஜயகுமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.