தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை... 4 பேர் போக்சோவில் கைது - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்

திருவள்ளூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் போக்சோவில் கைது

By

Published : Sep 30, 2022, 8:00 AM IST

திருவள்ளூர்:மோவூரில் 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்றதாக உறவினர்கள் மற்றும் தமிழர் படையின் தலைவர் கி. வீரலட்சுமி ஆகியோர் நேற்று முன் தினம் (செப். 27) எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

தீக்காயங்களுடன் சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எஸ்.பி., பா.சிபாஸ் கல்யாண் பென்னலூர்பேட்டை காவல் துறையினர் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ பதிவு செய்தது உறுதியானது.

இதனையடுத்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் அஜித் குமார் (25),ஞானமூர்த்தி(20), ராசு(23) மற்றும் அஜித்(26) ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.‌

அவர்கள் 4 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... 74 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை...

ABOUT THE AUTHOR

...view details