தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 2, 2020, 5:15 PM IST

ETV Bharat / state

பூட்டிய கடையை உடைத்து 30 ஆயிரம் ரூபாய்கொள்ளை!

திருவள்ளூர்: பூட்டிய மளிகை கடையை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மளிகை கடையில் திருட்டு
மளிகை கடையில் திருட்டு

திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராஜாஜிபுரத்தில் ரகுநாதன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல நள்ளிரவு 2 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கடைக்குள் சென்று பார்த்தார்.

அப்போது கடையில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ நடந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது அவரது கடைக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்..

சிசிடிவியில் வெளியான காட்சி

அதில் இரண்டு இளைஞர்கள் வந்து செல்வது தெரிந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா பாதித்த திருடன் தப்பியோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details