தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 6, 2020, 5:41 AM IST

ETV Bharat / state

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து, கஞ்சா கடத்தி வந்த இருவரை, கவரைப்பேட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா கடத்திய இருவர் கைது
கஞ்சா கடத்திய இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுவாயல் மகேந்திரா சிட்டி பகுதியில், கவரைப்பேட்டை காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவாயல் ஏலியம்பேட்டில், வழியாக வந்த இருச்சக்கர வாகனத்தை மறித்து நிறுத்தினர். அப்போது, மீஞ்சூரைச் சேர்ந்த ஹரிஹரன்(23), மோகன்(18) ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து பேசியதால் சந்தேகமடைந்த காவலர்கள், இருவரையும் சோதனையிட்டனர்.

ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் 2 போ் கைது

அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டையிலிருந்து, இருச்சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைதுசெய்த கவரைப்பேட்டை காவல்துறையினர், அவர்கள் கொண்டுவந்த கஞ்சாவையும், இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:வாகனச் சோதனையில் சிக்கிய ரவுடியின் கூட்டாளி... இப்போது புழலில்!

ABOUT THE AUTHOR

...view details