தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜவுளிக்கடையில் ரூ.30,000 மதிப்பிலான துணிகளை அள்ளிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு - Thiruvallur Police

திருவள்ளூர்: செங்குன்றத்தில் ஜவுளி வாங்குவதாகக் கூறி 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை அள்ளிச் சென்ற இருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

theft
theft

By

Published : Sep 15, 2020, 4:06 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் - திருவள்ளுர் கூட்டுச்சாலையில் தனிநபருக்குச் சொந்தமான துணிக்கடை உள்ளது.

இந்தக் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளைத் தேர்வுசெய்து எடுத்துக்கொண்டு, "கடையின் உரிமையாளர் ராஜேஷ் எனக்குத் தெரிந்தவர். அவருக்குப் போன் செய்யுங்கள்" எனக்கூறி ஊழியர்களிடம் போக்கு காட்டிவிட்டு துணிகளை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியைக்கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: காணாமல்போன 14 வயது சிறுமி: 3 மணி நேரத்தில் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details