தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை காவலர்களுக்கு இன்று முதல் வார விடுமுறை - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு இன்று முதல் வார விடுமுறை வழங்கப்படுகிறது.

நெல்லை காவலர்களுக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவிப்பு
நெல்லை காவலர்களுக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவிப்பு

By

Published : Sep 27, 2021, 4:48 PM IST

திருநெல்வேலி: மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகை நேர ஊதியம் உள்ளிட்டவை இன்று முதல் (செப்.27) வழங்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சுழற்சி முறையில் சுமார் 60 காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் அருணாச்சலம் என்பவர் மன அழுத்தம் காரணமாக மிகுந்த வருத்தத்துடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். நேற்று முன்தினம் (செப்.25) நெல்லை வந்த டிஜிபி சைலேந்திரபாபு சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தச் சூழ்நிலையில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளிகள் மீறினால் தூக்குவோம் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details