தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழா - திருநெல்வேலி மாவட்டம் உவரி தைப்பூசத்திருவிழா

திருநெல்வேலி: போராட்டத்துக்கு பிறகு உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழா தொடங்கியது.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூசத்திருவிழா
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூசத்திருவிழா

By

Published : Jan 20, 2021, 12:01 PM IST

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் பிரசித்தி பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு கரோனோ காரணம் காட்டி திருவிழாவை எளிமையாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.

இதை கேள்விப்பட்டு விழாவை வழக்கம்போல் கொடியேற்றி நடத்த வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பான வி.ஹெச்.பி மாநில தலைவர் பெரியகுலைகாதார் தலைமையில் ஊர் மக்கள் கோயில் முன்பு நேற்றிரவு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும் கொடியேற்றாவிட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விழா நடைபெற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் உறுதி அளித்தபடி இன்று கொடியேற்றத்துடன் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழா தொடங்கியது.

இதையும் படிங்க:சுயம்புலிங்க சுவாமி கோயில் விழா; குமரிக்கு உள்ளூர் விடுமுறை மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details