திருநெல்வேலி மாவாட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் உடல் நலக்குறைவு காரணமாக (ரத்த புற்று நோய்) மாதமிருமுறை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில்கள், பேருந்துகள் ஓடாததால் செல்வி சிரமப்பட்டுள்ளார்.