திருநெல்வேலி:கேரள மாநிலம் பத்தனம்திட்டா சிரோ மலங்கரா மறைமாவட்ட ஆயர் சாமுவேல் மார் இரோனஸ் (69), மலங்கர மறைமாவட்ட முதன்மை குரு ஷாஜி தாமஸ்(58), உள்ளிட்ட ஆறு பேர் கடந்த ஐந்தாம் தேதி நெல்லை மாவட்டம் பொட்டல் பகுதியிலிருந்து கேரளாவுக்கு ஆற்று மணல் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 பாதிரியார்கள் நாங்குநேரி சிறைச்சாலையிலும், மறைமாவட்ட ஆயர் சாமுவேல் மார் இரோனஸ் மற்றும் பாதிரியார் ஜோஸ் சமகலா ஆகியோர் கடந்த திங்கள்கிழமை முதல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.