திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 621 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது வெப் கேமரா கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதற்காக 621 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 42 நபர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் நாளைய தினம் நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் 51 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் நேரலை செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.