தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி - லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை! - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் சொத்தை விற்று ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 11, 2023, 10:51 PM IST

திருநெல்வேலி:பணகுடி அருகேவுள்ள பகுதியைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். இவர் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைனில் ரம்மி மூலமாக சீட்டு விளையாடும் பழக்கத்தை கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடி கடந்த ஒரு வருட காலத்திற்குள் சுமார் 15 லட்சம் ரூபாய் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ஒரு லட்சம் ரூபாய் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இதற்கிடையில் அடுத்தடுத்து பணத்தை இழந்த விரக்தியால் சிவன்ராஜ் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்ட சிவன்ராஜின் தந்தை பாஸ்கர், விவசாய தொழில் செய்து வருகிறார். ரம்மி விளையாட தந்தையிடமும் சிவன்ராஜ் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இடம் ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்தும் ரம்மி விளையாடியதாக தெரிகிறது.

தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில் நெல்லை பணகுடியில் இளைஞர் சிவன்ராஜின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க:ஜாமீனில் வெளிவந்த இளைஞர் வெட்டிக்கொலை: பின்னனி என்ன?

ABOUT THE AUTHOR

...view details