திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இணையவழியில் மாநில அளவில் கண்தான விழிப்புணர்வு கவிதை போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியானது மாணவ - மாணவியர் பிரிவு, பொதுமக்கள் பிரிவு, கவிஞர்களுக்கென மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.
நெல்லையில் நடைபெற்ற இணையவழி கண்தான விழிப்புணர்வு கவிதை போட்டி - நெல்லை மாவட்ட செய்திகள்
நெல்லை: கண்தான விழிப்புணர்வு கவிதை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாநகர காவல் துணை ஆணையர் பரிசும், சான்றிதழும் வழங்கினார்.
![நெல்லையில் நடைபெற்ற இணையவழி கண்தான விழிப்புணர்வு கவிதை போட்டி Thirunelveli eye donation awarness Programme](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:42:02:1600265522-tn-tvl-02-nellaidc-givencertificate-forchild-scrpt-7205101-16092020193612-1609f-1600265172-1044.jpg)
Thirunelveli eye donation awarness Programme
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநகர காவல் துணை ஆணையாளர் அர்ஜுன் சரவணன் போட்டியாளர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.