வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு கட்ட பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தென்காசி தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் சாவடிகளை பார்வையிட்டார்.
வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்த நெல்லை ஆட்சியர்! - வாக்கு சாவடி
திருநெல்வேலி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி தொகுதி வாக்கு சாவடிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் பார்வையிட்டார்.

வாக்கு சாவடிகளை திருநெல்வேலி ஆட்சியர் ஆய்வு!
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 515 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மத்திய தொழிற்படை பாதுகாப்பு பிரிவும் வந்துள்ளது" என்றார்.
வாக்கு சாவடிகளை திருநெல்வேலி ஆட்சியர் ஆய்வு!