தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2022, 3:55 PM IST

ETV Bharat / state

நெல்லையில் கர்ப்பிணிகளுக்கான செயலி ‘தாய் கேர்’ அறிமுகம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக கர்ப்பிணிக்குக்கான தாய் கேர் என்ற செயலி நெல்லையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக நெல்லையில்  தாய்மை பாதுகாப்பு எனப்படும் தாய் கேர் என்ற இணைய செயலி அறிமுகம்.
தமிழகத்தில் முதல்முறையாக நெல்லையில் தாய்மை பாதுகாப்பு எனப்படும் தாய் கேர் என்ற இணைய செயலி அறிமுகம்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கர்ப்பிணிக்குக்கான தாய் கேர் என்ற செயலியை இன்று(மே 7) அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கருவுற்ற தாய்மார்களின் தாய்மை பாதுகாப்பு என்ற இணைய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு "தாய் கேர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. கருவுற்ற காலம் முதல் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணி மற்றும் குழந்தையின் உடல் நிலை விபரங்களை இந்த செயலி மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த செயலி, தாய்மார்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, ஊரக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் சிகிச்சையினை எளிதாகத் தொடர்ந்து கொள்ள உதவியாக இருக்கும்.

இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும். இதிலிருந்து மருத்துவ உதவி பெற தாய்மார்கள் இணைய தொலைபேசியை பயன்படுத்தும் வசதி உள்ளது.

இந்த இணைய செயலியில் பதிவாகும் விவரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் காணும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கருவுற்ற பெண்களின் உடல் நிலையில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மொத்தமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு கருவுற்ற நிலையிலிருந்து பேரு காலம் முடிந்து சுமார் 42 நாட்கள் வரை அனைத்து விபரங்களை ஆராய்ந்து அதன்மூலம் தேவைப்படும் சத்துணவு மற்றும் சிறப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாடுகளில் இருப்பது போல் நம் நாட்டில் சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் பயன்படும் வகையில் இந்த செயலி மாநிலத்தில் முதல் முறையாக சுகாதாரத்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்

இதையும் படிங்க:போதை மறுவாழ்வு மையத்தில் கொலை: உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்!

ABOUT THE AUTHOR

...view details