தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2020, 10:30 PM IST

ETV Bharat / state

சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு - காவல்துறை விசாரணை!

நெல்லை: ராதாபுரம் அருகே சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Roadside unidentified male body recovered - Police investigation!
Roadside unidentified male body recovered - Police investigation!

நெல்லை மாவட்டம் ராதாபுரத்திலிருந்து வடக்கன்குளம் செல்லும் சாலையில், இன்று (செப். 26) ஆண் சடலம் கிடப்பதாக ராதாபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உயிரிழந்த நபர் யார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:உடற்பயிற்சி கூட உரிமையாளருடன் சென்ற மனைவி: மீட்டுத்தரக் கோரி கதறும் கணவர்!

ABOUT THE AUTHOR

...view details