திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள், நெல்லை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மத்திய அலுவலகம் முன்பு இன்று (பிப்ரவரி 25) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் மொத்தம் 86 ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஓய்வுபெற்ற தொழிலாளிகளுக்கு 2015ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகை இதுவரை வழங்கவில்லை.
அதனை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் அதற்கான தொகையை ஏழாயிரத்து 850 ரூபாய் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும்.