தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீவலப்பேரி கொலை விவகாரம்: உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்! - சீவலப்பேரி கொலை விவகாரம்

திருநெல்வேலி: சீவலப்பேரி கொலை விவகாரத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

By

Published : Apr 21, 2021, 9:15 PM IST

திருநெல்வேலி அருகே சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் கடந்த ஞாயிறு அன்று (ஏப்.18) அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், நடராஜ பெருமாள் என்பவர் அரிவாளால் வெட்டிப்பட்டதில் படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து 3ஆவது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் தரையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது, இறந்த சிதம்பரம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண உதவியாக குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இறந்த பூசாரி சிதம்பரத்தில் உடலை கோயில் வளாகத்தில் புதைக்க வேண்டும். கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

காவல் துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளிலே திரண்டு இருப்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சீனிவாசன், மகேஷ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிரடி பிரிவு காவல் துறையினர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சுப நிகழ்ச்சியில் 50% மக்களை அனுமதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details