தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணம்!

நெல்லை: காணாமல் போன ஒன்பது வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓன்பது வயது சிறுவன் மரணம்

By

Published : May 28, 2019, 2:09 PM IST

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தளவாய். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கொம்பையா (9) மே 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவன் வீடு திரும்பவில்லை.

மாலை ஐந்து மணி வரை காத்திருந்த பெற்றோர் காணாமல்போன சிறுவனை பல இடங்களில் தேடியுள்ளனர். இரவுவரை கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் கொம்பையாவின் பெற்றோர் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தாழையூத்து காவல் துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை குறிஞ்சிக்குள பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அங்கு ஒரு சிறுவனின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் காவல் துறையினர், கொம்பையாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கையில் கொம்பையா தலையில் அடிபட்டு காயத்துடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்து அவனின் பெற்றோர் கதறி அழுதனர்.

அவர்களுக்கு சமாதானம் கூறிய காவல் துறையினர் சிறுவன் கொம்பையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து, சிறுவன் மர்மமான முறையில் இறந்திருப்பது கொலையா? இதில் யார் ஈடுபட்டுள்ளார்கள்? என பல்வேறு கோணங்களில் தாழையூத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

காணாமல்போன ஒன்பது வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details