தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2019, 11:27 AM IST

ETV Bharat / state

ரமலான் பெருநாளை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

திருநெல்வேலி: ரமலான் பெருநாளை முன்னிட்டு மேலப்பாளையத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

ரமலான்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று சவுதி உள்ளிட்ட நாடுகளில் பிறை தெரிந்ததையடுத்து அங்கு ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், நெல்லை மேலப்பாளையத்தின் மஸ்ஜித் தக்வா ஜமாத், தவ்பா ஜமாத் சார்பாக பஜார் திடலில் ரமலான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரமலான் பெருநாளை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

மேலும் தொழுகையில் பெருநாள் உரையும் ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details