தென்காசியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி! - வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
தென்காசி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தென்காசியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
நெல்லை மாவட்டம், தென்காசியில் இன்று கல்லூரி மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், இதில் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் தென்காசி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷமிட்டும் பெரிய கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரணியாக சென்றனர்.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி