தமிழ்நாடு

tamil nadu

திருநெல்வேலி காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு

திருநெல்வேலியில் விசாரணை கைதி ஒருவர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Feb 4, 2022, 11:02 PM IST

Published : Feb 4, 2022, 11:02 PM IST

திருநெல்வேலி காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு
திருநெல்வேலி காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு

திருநெல்வேலி: மேலப்பாளையம் ஆமீன் புரத்தை சேர்ந்தவர் சுலைமான் (42). இவர் மீது இருசக்கர வாகன திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில் சுலைமானை திருட்டு வாகனத்துடன் சுற்றிவளைத்த பொதுமக்கள், அவரை காவல் துறையினரிடத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி காவல்நிலையத்தினர் விசாரணை நடத்துகையில், சுலைமான் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க:நிரூப்புடன் எப்போது திருமணம்?; ரசிகருக்கு பதிலளித்த யாஷிகா!

ABOUT THE AUTHOR

...view details