தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2020, 5:30 PM IST

ETV Bharat / state

தடையை மீறி ஆற்றில் குளிக்கச் சென்றவர்களுக்கு நூதன தண்டனை!

திருநெல்வேலி: ஊரடங்கு உத்தரவை மீறி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றவர்களுக்கு காவல் துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.

குளித்தவர்களை தண்டித்த காவல் துறையினர்
குளித்தவர்களை தண்டித்த காவல் துறையினர்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்கா உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் 144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குளித்து வந்தனர்.

குளித்தவர்களை தண்டித்த காவல் துறையினர்

இதைக் கண்ட காவல் துறையினர், குளித்தவர்களை அழைத்து கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், 144 தடை உத்தரவை மதிப்போம், கரோனாவை ஒழிப்போம் என்னும் உறுதிமொழியை ஏற்க வைத்தனர்.

இதையும் படிங்க: தடையை மீறி சாலையில் திரிந்த வாகனங்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details