தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

180 மதுபாட்டில்களுடன் காரில் தப்ப முயன்ற நபர்..மடக்கிப் பிடித்த காவல்துறையினர்! - திருநெல்வேலியில் மது பாட்டில்கள் கடத்தல்

திருநெல்வேலியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதற்காக காரில் மதுபாட்டில்களை கொண்டு சென்றபோது, காவல்துறையினர் மடக்கிப் பிடித்து 180 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

police arrested a man escape with liquor  man escape with liquor arrested  police arrested a man in Tirunelveli  Tirunelveli man escape with liquor arrested  மது பாட்டில்களுடன் தப்பிச் சென்றவர் கைது  திருநெல்வேலியில் மது பாட்டில்களுடன் தப்பிச் சென்றவர் கைது  திருநெல்வேலியில் மது பாட்டில்கள் கடத்தல்
மது பாட்டில்களுடன் தப்பிச் சென்ற நபர்

By

Published : Feb 12, 2022, 2:08 PM IST

திருநெல்வேலி:திசையன்விளை அருகே விஜய அச்சம்பாடு பகுதியைச் சேர்ந்த அருள் (43) என்பவர், கள்ளச்சந்தையில் மது விற்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதற்கிடையில், அருள் பெட்டைகுளம் டாஸ்மாக் கடையிலிருந்து 180 மதுபாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யக் காரில் கொண்டு சென்றுள்ளார். இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர் அருளைப் பிடிக்க முயன்றனர்.

அப்போது காவலர்களிடமிருந்து தப்ப முயன்று அருள் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். செல்வி மஹால் அருகே பேரிகார்டு வைத்து தடுத்து நிறுத்தி அருளை காவல்துறையினர் பிடித்தனர். அவரிடமிருந்து 180 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கையும் களவுமாகப் பிடிபட்ட தொடர் பைக் திருடர்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details