திருநெல்வேலி: நாளுக்கு நாள் இளைஞர்களிடையே இருசக்கர வாகனம் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் சமீபகாலமாக இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான புது புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. நாகரீக காலத்தில் இது போன்ற வாகனங்கள் தேவை என்றாலும் கூட இளைஞர்கள் அதை தவறாக பயன்படுத்துவதால் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் பாதிப்பு
வேகமாக இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் ஓட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு கடிவாளம் போடும் வகையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 2,000 விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு 1,980 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிக வேகத்தில் செல்வதால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. விபத்தை தடுக்க காவல்துறை பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், வள்ளியூர் பகுதியில் இளைஞர்களின் வாழ்வை மீட்பதற்காக மாவட்ட காவல்துறை பொதுமக்களுடன் இணைந்து புது நடவடிக்கையை கையாண்டு வருகிறது.
காவல்துறை நோட்டீஸ்