தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்!

நெல்லை: தச்சநல்லுார் அருகே இளைஞர் அசோக் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

nellai

By

Published : Jun 13, 2019, 10:16 AM IST

நெல்லை மாவட்டம் தச்சநல்லுார் அடுத்த கரையிருப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக்(32). இவர் நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் கரையிருப்பு ரயில்வே கேட் அருகே அவரை படுகொலை செய்தனர். இதனை அறிந்த அசோக்கின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மதுரை-நெல்லை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து நெல்லை மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், காவல் துணை ஆணையர் மாலிக் பெரோஸ்கான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், குற்றவாளிகளை கைது செய்தால்தான் உடலை ஆய்வுக்கு அனுப்பிவைப்போம்; இல்லையெனில் உடலை யாரும் தொடக்கூடாது என உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இளைஞர் படுகொலை- உறவினர்கள் சாலைமறியல்

சுமார் நான்கு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊர்மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் உடல் நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், தச்சநல்லுார் காவல் நிலையத்தினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details