தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 22, 2020, 6:53 PM IST

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி கைது

தென்காசி: மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

one person arrest in pocso in tenkasi
one person arrest in pocso in tenkasi

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கானாவூரைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (37). இவர் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், நேற்று (மே 21) தனது வீட்டின் அருகே வசிக்கும் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கடையம் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் அமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்ஸோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details