தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை... பணிச்சுமை காரணமா? - kudankulam nuclear plant employee Suicide

திருநெல்வேலி: கூடங்குளத்தில் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nellai-kudankulam-nuclear-plant-employee-suicide
nellai-kudankulam-nuclear-plant-employee-suicide

By

Published : Sep 11, 2020, 9:04 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கூடங்குளம் அருகிலுள்ள செட்டிகுளத்தில் குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்குதான் 80 விழுக்காடு ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குடியிருப்பில் கார் பார்க்கிங் பகுதியில் இன்று (செப்டம்பர் 11) ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், கூடங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடம் வந்த காவலர்கள் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த பைஜீ என்பதும், அவர் அணுமின் நிலையத்தில் போர் மேன் ஆக பணிபுரிந்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

இதனிடையே அவர் உடலுக்கு அருகில் ஒரு கடிதம் இருந்ததும் கண்டறிப்பட்டது. அதில், தற்கொலைக்கு யாருடைய தூண்டுதலும் யாரும் காரணம் இல்லை எனவும், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுத்ததாகவும் கூடங்குளம் காவல் ஆய்வாளருக்கு பைஜு கடிதம் எழுதியிருந்தார்.

இருப்பினும் அவர் பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்தாரா அல்லது வேலை செய்த இடத்தில் வேறு எதாவது பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details