நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உடையார்பட்டி பகுதியில் இருதய ஆண்டவர் ஆலயத்துக்குச் சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து 50க்கும் மேற்பட்ட கல்லறைகளை கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தினர். இச்சம்பவத்தைக் கண்டித்து ஆலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தச்சநல்லூர் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் உடையார் உள்ளிட்ட எட்டு நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.