நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேர்தல் நடைபெறவிருக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இங்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தேர்தல் உதவிஅலுவலராக வட்டாட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.