திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனது, திருடு போனது, வழிப்பறி செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களிலிருந்து வரும் புகார்களை நெல்லை சைபர் கிரைம் காவல் துறை விசாரணை செய்து நவீன தகவல் தொழில்நுட்பம் உதவியுடன் பொருள்களை மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணாமல்போன, திருடுபோன ஆறு லட்சத்து ஏழாயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்களை சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.