கரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு சில ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
வரும் 4-ஆம் தேதி முதல் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் மூன்றாவது நடைமேடைக்கு ரயில்பெட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்காக கொண்டு வரப்பட்டது.