தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி!

நெல்லை: செங்கோட்டை அருகே இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த லாரி மீது நிலைதடுமாறி மோதிய விபத்தில், இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Published : Mar 3, 2019, 5:27 PM IST

Nellai 1

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் சிமெண்ட் குடோன் உள்ளது. இந்த சிமெண்ட் குடோனில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரியும், செங்கோட்டை அருகே உள்ள அழகப்பாபுரத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

செங்கோட்டை அருகே உள்ள நித்யகல்யாணி அம்மன் கோவில் அருகே எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரியில் நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் லாரி நிலை தடுமாறி அருகிலுள்ள வயலுக்குள் கவிழ்ந்தது. இறந்தவர்கள் அழகப்பாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் (35) மற்றும் சவுந்தரபாண்டியன் (23) என தெரியவந்துள்ளது. இது குறித்து செங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details