தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் பலி - இடி, மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் பலி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

பெண்கள் பலி
பெண்கள் பலி

By

Published : Dec 6, 2021, 8:04 AM IST

திருநெல்வேலி: மேலப்பாளையம் நடராஜபுரத்தைச் சேர்ந்த பாலேஸ்வரி, முத்துமாரி மற்றும் 60 வயது மூதாட்டி வள்ளியம்மாள் ஆகிய மூன்று பேர் கருங்குளம் பகுதியில் வயல் நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் வயலில் பணியில் இருந்த மூவரும் அருகில் ஒதுங்கியதாக தெரிகிறது.

திடீரென இடி, மின்னல் தாக்கியதில் பாலேஸ்வரி, முத்துமாரி ஆகிய இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மூதாட்டி வள்ளியம்மாள் படுகாயமடைந்தார்.

உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற மேலப்பாளையம் காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details