நெல்லை: பாளையங்கோட்டை தியாகராஜன் நகரை சேர்ந்தவர் இசக்கி முத்து மகன் வேல்ராஜ் (29). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்ததால் வேல்ராஜின் மனைவி தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று வேல்ராஜ் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவில் தனது தந்தையிடம் போன் செய்து சமாதானப்புரத்திற்கு வந்து பஸ்ஸில் இறங்குவதாக கூறியுள்ளார். அவரை அழைத்து செல்வதற்காக இசக்கிமுத்து சமாதானப்புரத்திற்கு வந்துள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வேல்ராஜ் வரவில்லை. இதையடுத்து இசக்கிமுத்து போன் செய்தபோது, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு ரூ.15 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வேல்ராஜ் செல்போனை தொடர்பு கொண்டபோது ஊருடையார்புரம் பகுதியை காட்டியது. அங்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது வேல்ராஜ் உள்பட மூன்று பேர் இருந்துள்ளனர்.