தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பான தேரோட்டம் - நெல்லை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் விளக்கம் - நெல்லை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளார் செல்வககுமார் செய்தியாளர்களுடன் சந்திப்பு

தேரோட்டம் நடைபெறும 15 நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என நெல்லை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். தேரோட்டத்தின் போது தேரோடும் வீதிகளில் மின்சாரத்தை நிறுத்திடவும், தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்றி பாதுகாப்பாக தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் தேர் விபத்துகான காரணம் என்ன!
தஞ்சாவூர் தேர் விபத்துகான காரணம் என்ன!

By

Published : Apr 30, 2022, 1:23 PM IST

நெல்லை: மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் செல்வகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேரோட்டத்தின் போது தேரோடும் வீதிகளில் மின்சாரத்தினை நிறுத்திடவும், தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்றி பாதுகாப்பாக தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்யவும் தேரோட்டம் நடைபெறும் தினத்திற்கு, 15 நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்

தேர் அமைக்கும்போது உலோகத்தினால் ஆன பாகங்களுக்கு பதிலாக மரக்கட்டைகள் கொண்டு அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். தேரோட்டத்தின் போது சம்பந்தப்பட்ட தேர் அல்லது சப்பரத்தில் ஜெனரேட்டர் மூலம் அலங்கார விளக்குகள் அமைத்தால் அதற்கு தகுந்த மின் கசிவு தடுப்பு சுருவி (RCCB- Residual Current Circuit Breaker) பொருத்தி அலங்கார விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். மின்சாரத்தினால் தீ ஏற்பட்டால் முதலில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். மேலும் மின்சாரத்தினால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்ககூடாது முன்னேற்பாடு பாதுகாப்பு செய்துகொள்ள வேண்டும்.

!

நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெறும் நான்கு ரத வீதிகளிலும், குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலை சுவாமி திருக்கோவில் ஆகிய இரண்டு கோவில்களிலும் தமிழக அரசு வழிகாட்டுதல்படி மின் இணைப்புகள் தரைவழியாக கொடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு தொடங்கியுள்ளது ,

மேலும் இதுபோன்று திருநெல்வேலி மண்டல மின்பகிர்மான கழகத்தில் கீழ் உள்ள நெல்லையப்பர் கோவில், திருக்குற்றால நாதர் திருக்கோயில், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் என தேர் ஒடும் பெரிய கோவில் ரத வீதிகளில் தரைவழியாக மின் இணைப்பு கொடுக்கவும் விரைவில் அரசின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details