திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சொரிமுத்து (37). இவர் கேரளாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வடை போட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த ரம்லத் (30) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, மனைவியை சொந்த ஊரான குறிச்சிகுளத்திற்கு தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். சொரிமுத்து மட்டும் கேரளாவில் தங்கி தொழில் செய்துவந்தார். விடுமுறை நாள்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கரோனா தொற்று ஊரடங்கால் கேரளாவில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், சொரிமுத்து கடந்த ஒரு மாதமாக சொந்த ஊரான குறிச்சிகுளத்தில் குடும்பத்தினருடன் உள்ளார். அப்போது,ரம்லத்தின் நடத்தை சரியில்லை என்று அவரது நண்பர்கள், ஊரில் உள்ள சிலர் சொரிமுத்துவிடம் தெரிவித்துள்ளனர்.