தென்காசி மாவட்டத்திலுள்ள வ.உ.சி. நினைவு வட்டார நூலகத்தில் நடைபெற்ற பள்ளி விடுமுறைகால சதுரங்கப்போட்டியில் 20 பள்ளிகளிலிருந்து 67 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 5ஆம் வகுப்பு வரை உள்ள பிரிவில், நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் சஞ்சீவ் பாலா முதல் பரிசும், அன்னை வேளாங்கன்னி பள்ளி மாணவி மலரிதழ் இரண்டாம் பரிசும், எஸ்.எம.ஏ. மெட்ரிக் பள்ளி மாணவன் வித்யோஸ் மூன்றாம் பரிசும் பெற்றனர்.