தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: நெல்லையில் தலைமைக் காவலர் மரணம்! - கரோனா தொற்றால் காவலர் பலி

திருநெல்வேலி: கரோனா தொற்று காரணமாக உவரி காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

corona
corona

By

Published : Mar 19, 2021, 10:26 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், கரோனா தொற்றின் இரண்டாம் கட்ட தாக்கம் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் பல நாள்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 19) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் விஜயகுமார் என்பவர் தலைமைக் காவலராகப் பணியாற்றிவந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல், தலைவலி ஏற்பட்டது.

இதனால் சிகிச்சைப் பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் விஜயகுமாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதற்கிடையில், விஜயகுமாரின் கல்லீரல் பாதிக்கப்பட்டதையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. இந்தச் சூழ்நிலையில், சிகிச்சைப் பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 15 ஆயிரத்து 859 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கரோனா தொற்று காரணமாக மாவட்டம் முழுவதும் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details