திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பன் (73). அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் எம்.ஏ. வரலாறு, பி.எட். ஆகிய படிப்புகளை முடித்துள்ளார்.
இந்நிலையில் உயர் கல்வியின் மீதும் காந்திய கொள்கைகள் மீதும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பி.ஹெச்.டி. படிப்பைத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து, இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு காந்திய தத்துவம் எவ்வாறு பொருத்தமானது என்ற தலைப்பில் எட்டு ஆண்டுகளாக முதியவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியாக 2018ஆம் ஆண்டு பி.ஹெச்.டி. படிப்பை முடித்துள்ளார்.